இலங்கைசெய்திகள்

தமிழ்தேசிய மக்கள் முன்னணியே தமிழ் மக்களின் தலைமைகள் – கஜேந்திகுமார் சூளுரை!!

தமிழ்தேசிய அரசியலில் முக்கிய விடயங்களில் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களை உடைய தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி என்ன தீர்மானத்தை எடுக்கப்போகின்றது என்பதை பொறுத்திருந்து பார்த்துத்தான் ஏனைய பத்து பாராளுமன்ற உறுப்பினரை வைத்திருக்கும் தரப்புக்கள் தாங்கள் கூட்டாக தீர்மானம் எடுக்கிறார்கள் என்றால் தமிழ்தேசிய மக்கள் முன்னணிதான் தமிழ் மக்களின் அரசியல் தலைமை.

ஆகவே நாங்கள்தான் உண்மையான தமிழ் மக்களின் தலைமை என கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் 2022 ஆம் ஆண்டுக்கான தேசிய மாநாடு முல்லைத்தீவில் இன்று இடம்பெற்றபோதே நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,
தமிழ் மக்களிடம் வாக்கு கேட்கும் போது சமஷ்டியே எங்கள் இறுதி தெரிவு, வடக்கு – கிழக்கு தமிழர் தாயகம் என்று எல்லாம் கூறி மக்கள் ஆணையைப் பெற்றவர்கள் தான் இன்று தமிழ் மக்களை ஏமாற்றுகின்றார்கள் என்றார்.

Related Articles

Leave a Reply

Back to top button