இலங்கைசெய்திகள்

சட்டவிரோத மண் அகழ்வினால் மிகப்பெரும் வளங்களை இழக்க முடியாது

சட்டவிரோத மணல் அகழ்வுகளால் மாவட்ட
திலிருக்கும்  மிகப் பெரிய வளங்களை இழக்க  முடியாது. இதனால் ஏற்படும் அழிவுகள் ஆபத்துக்கள் மிக அதிகம் எனவே  அனைவரும்  இவ்விடயத்தில் பொறுப்புடன் செயற்படவேண்டும் என கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் சட்டவிரோதமான முறையில் இடம்பெறுகின்ற மணல் அகழ்வு களை கட்டுப்படுத்துவது தொடர்பிலான கலந்துரையாடல் இன்று (24) மாவட்ட செயலக மண்டபத்தில் மாவட்ட அரச அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.

இதில் கருத்து தெரிவிக்கும் போதே மேற் கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,
“அதிகாரிகளாகிய நாங்கள் இன்று இங்கே கடமையில் இருப்போம்.  சில  வருடங்களுக்குள் சென்று விடுவோம் ஆனால், இந்த சமூகமும் இந்த மக்களும் இப் பிரதேசத்திலேயே தொடர்ந்தும் இருக்கப் போகின்றார்கள் ஆகவே இந்த சட்டவிரோத மணல் அகழ்வுகளை கட்டுப்படுத்த  அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

குறிப்பாக, இங்கே இருக்கின்ற ஒரு பெரிய வளமான இரணைமடு குளத்தின் கீழ் மணல் அகழ்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால் எதிர் காலத்தில் பெரிய ஒரு வளத்தை இழந்து போக முடியாது. இதனால் ஆபத்துக்களும் அழிவுகளும் அதிகமாக இருக்கும்.

முதற்கட்டமாக 5 இடங்களில் இராணுவ காவலரண்களை அமைத்து அதன் மூலம் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு இதனை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் 

அதற்கு கமக்காரர் அமைப்புகள் மற்றும் நீர்ப்பாசனத் திணைக்களம் என்பன  இடங்களை அடையாளப்படுத்தி காவலரண்களை அமைப்பதற்கான ஏற்பாடுகளை செய்து வழங்க வேண்டும்”  என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related Articles

Leave a Reply

Back to top button