இலங்கைசெய்திகள்

அரைக்காற்சட்டையுடன் யாழ்.பல்கலைக்கழகத்தினுள் வந்த மாணவரை கண்டித்தமையினால் சிரேஷ்ட மாணவர் மீது தாக்குதல்

யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒருவர் கல்லுண்டாய் பகுதியில் வைத்து ரவுடிக்கும்பலால் தாக்கப்பட்டுள்ளதாக மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது,

சில நாட்களுக்கு முன்னர் யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒருவர் அரைக் காற்சட்டையுடன் பல்கலைக்கழக மாணவர் அல்லாத இன்னொருவருடன் உள்ளே வந்திருந்தார்.

இதனை, அவதானித்த சிரேஷ்ட மாணவர்கள் அரைக்காற்சட்டையுடன் வந்த பல்கலைக்கழக மாணவரை அழைத்து அரைக் காற்சட்டையுடன் பல்கழைக்கழகத்திற்குள் வரமுடியாது பல்கலைக்கழகத்தை விட்டு வெளியேறுமாறு தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், பல்கலைக்கழக மாணவர் அல்லாத இளைஞன் தாக்குதலுக்கு உள்ளான இளைஞனுடன் பல்கலைக்கழகத்தில் முரண்பட்டுள்ளார்.

குறித்த மாணவர் தனது நண்பனின் முச்சக்கர வண்டியில் சென்று கொண்டிருந்தபோது ரவுடிக்கும்பலால் மறிக்கப்பட்டு கடுமையான முறையில் தாக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையிலேயே தாக்குதலுக்கு உள்ளான மாணவனால் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைபப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button