![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/02/IMG-20220219-WA0015-1024x576.jpg?resize=708%2C398&ssl=1)
உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு யாழ்ப்பாணம் வருகைதந்துள்ள கொழும்பு மேயர் ரோஸி சேனநாயக்க உள்ளிட்ம அவரது குழுவினர் இன்று (19) வலி. தென்மேற்கு பிரதேச சபைக்கு விஜயம் மேற்கொண்டனர்.
மானிப்பாய் அந்தோனியர் ஆலயத்தில் இருந்து மாலை அணிவித்து பாரம்பரிய கலாச்சார முறைப்படி மேயர் ரோஸி சேனநாயக்க பிரதேச சபைக்கு அழைத்து வரப்பட்டார்.
அதன்பின்னர் பிரதேச சபையில் கௌரவிப்பு நிகழ்வு நடைபெற்றது. பின்னர் கொழும்பு மேயர் மற்றும் வலி. தென்மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் ஆகியோர் நினைவுச் சின்னங்களை பரிமாறிக்கொண்டனர்.