இலங்கைசெய்திகள்

இயக்கச்சி விபத்து பெண் ஒருவர் பலி

இயக்கச்சியில் இன்று (26) இடம்பெற்ற வாகன விபத்தில் 60 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

உடுத்துறை வடக்கு தாளையாடியைச் சேர்ந்த 60 வயதுடையஶ்ரீ ஞானசீலன் தவமலர் என்பவரே உயிரிழந்துள்ளார்.

இயக்கச்சியில் அமைந்துள்ள எரிபொருள் நிலையத்திற்கு மோட்டார் சைக்கிள் வந்தவர் திருப்ப முற்பட்டபோது யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா நோக்கி சென்றுகொண்டிருந்த அரச பேரூந்து மோட்டார்சைக்கிளை மோதியதிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த பெண்ணின் சடலம் பளை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Leave a Reply

Back to top button