![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2021/11/bbbb.jpg?resize=236%2C157&ssl=1)
லண்டனின் தென் கிழக்குப் பகுதியில் உள்ள பெக்ஸ்லீஹீத் எனும் இடத்தில் ஏற்பட்ட பாரிய தீப்பரவல் காரணமாக இலங்கையைப் பூர்வீகமாக கொண்ட நால்வர் பலியாகியுள்ளனர்.
![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2021/11/21-6197d058cc7b6.jpg?resize=600%2C400&ssl=1)
இந்த அனர்த்தத்தில் இரண்டு பெண்களும் இரண்டு சிறுவர்களும் அடங்குவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. திருகோணமலை சேர்த்த ஓரே குடும்பத்தவர்களான நால்வர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது .
குறித்த கட்டடத்தொகுதியில் தீப்பரவல் ஏற்பட்டதாக உறவினர் ஒருவர் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார். 6 தீயணைப்பு இயந்திரங்கள 40 தீயணைப்பு வீரர்களும் மீட்பு பணியில் ஈடுபட்டிருந்த நிலையில் நால்வரது சடலங்களுமே மீட்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அவர்கள் இறந்திருந்தமை தெரியவந்துள்ளது.
![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2021/11/21-6197d269f0ccb.jpg?resize=600%2C400&ssl=1)
ஆயினும் இக் கட்டடத்தில் இருந்து வெளியேறிய ஒருவர் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.