இலங்கைசெய்திகள்

நாட்டைவிட்டு வெளியேறும் வைத்தியர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!!

நாட்டிலிருந்து வெளியேறி வெளிநாடு செல்லும் வைத்தியர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்க மத்தியக் குழு உறுப்பினர் வைத்தியர் ருவன் ஜயசிறி தெரிவித்துள்ளார்.

தற்போது நாட்டிலிருந்து வைத்தியர்கள் வெளியேறுவதாக கூறப்படுகிறது. வைத்திய சபையின் ஊடாக வெளிநாடு செல்வதற்கான அனுமதி சான்றிதழ் வழங்கப்படுகிறது. இதன்போது 2,200 அனுமதிச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளள.

இதனூடாக வைத்தியர்கள் நாட்டை விட்டுச் சென்றதாக தெரிவிக்கமுடியாது. விசேட வைத்தியராக ஒருவர் பதிவு செய்வதற்கு முன்னர் வெளிநாட்டுப் பட்டம் பெற்றிருக்க வேண்டும் என்பதால் அவர்களில் அதிகமானோர் கற்றல் செயற்பாடுகளுக்காக வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளதாக அரச மருத்துவஅதிகாரிகள் சங்கத்தின் மத்தியக் குழு உறுப்பினர் வைத்தியர் ருவன் ஜயசிறி தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button