இலங்கைசெய்திகள்

ஜோசப் ஸ்டாலினுக்கு ஆதரவாக யாழில் ஆர்ப்பாட்டம் முன்னெடுப்பு!!

Jaffna

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கைது செய்யப்பட்டமையைக் கண்டித்து யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராஜா கஜேந்திரன், ஆசிரியர் சங்கத்தின் உறுப்பினர்கள், யாழ். பல்கலைக்கழக ஊழியர் சங்க பிரதிநிதிகள் எனப் பலரும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

Related Articles

Leave a Reply

Back to top button