
முல்லத்தீவு புதுக்குடியிருப்பில் சொகுசுக் காரில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் காதலர்கள் புதுக்குடியிருப்புப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் இருந்து சொகுசுக்காரில் போதைப்பொருள்களைக் கொண்டு சென்று விற்பனையில் ஈடுபட்ட போதே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம். இளவாலையைச் சேர்ந்த 23 வயதுடைய யுவதியும் அவரது காதலரான இளைஞனுமே கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் இருவரையும் முல்லைத்தீவு மாவட்ட நீதிவான் நீதிமன்றில் முற்படுத்திய பொலிசார், சந்தேகநபர் இருவரரையும் தடுத்து வைத்து விசாரணை மேற்கொள்ள புதுக்குடியிருப்பு பொலிசார் நீதிமன்றில் அனுமதி கோரினர்.
பிரதான சந்தேகநபரான இளைஞனை மூன்று நாள்கள் பொலிஸ் காவலில் வைத்து விசாரணை செய்ய நீதிமன்று அனுமதித்தது. மேலும் காதலியான யுவதியை யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.