இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

இன்றைய செய்திப் பார்வை!!

News

 1.

கிளிநொச்சியில் சிறுவர் நீதிமன்றம் திறப்பு!!

நேற்று வெள்ளிக்கிழமை கிளிநொச்சி நீதிமன்ற வளாகத்தில் சிறுவர் நீதிமன்றம் திறந்து வைக்கப்பட்டது. 

இது இலங்கையின் 3வது சிறுவர் நீதிமன்றம் ஆகும். 

2.

போர்க் குற்றவாளிகளைக் கண்டறிந்து நீதிமன்றத்தில் தண்டனை வழங்கப்படும்!!

போர்க்குற்றவாளிகளைக் கண்டறிந்து நீதிமன்றம் மூலம் தண்டனை வழங்கப்படும் என யாழ்ப்பாணம் வந்த அனுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். 

3.

இனப்படுகொலை தொடர்பில் கனடா கருத்து!!

இனப்படுகொலை கல்வி வாரச்சட்டம் கனடாவின் அரசமைப்புக்கு உட்பட்டது என அந்நாட்டு மேன்முறையீட்டு நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது. 

4.

வர்த்தகர்கள் உட்பட வவுனியாவில் மூவர் கைது!! 

அனுராதபுரத்தில் மோட்டர் சைக்கிள் திருடி அதை பயன்படுத்தி 9 இடங்களில் நகைகளை அறுத்துச் சென்ற குற்றச்சாட்டில் வவுனியாவில் ஒருவரையும் திருடிய நகைகளை வாங்கிய வர்த்தகர்களையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

5.

கொல்கொத்தா பெண் மருத்துவர் கொலையில் வெளியான முக்கிய தகவல் !!

கொல்கத்தாவில் மருத்துவமனையில் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட பெண் மருத்துவரின் உடலில் இருந்து எடுக்கப்பட்ட மாதிரிகள், மரபணு சோதனையில் சஞ்சய் ராயுடன் ஒத்துப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இச்சம்பவத்தில், சஞ்சய் ராய் என்பவர் மட்டுமே குற்றவாளியாக இருக்க முடியும் என, விசாரணையில் தெரிய வந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

செய்தியாளர் – சமர்க்கனி

Related Articles

Leave a Reply

Back to top button