இலங்கைசெய்திகள்

புலம்பெயர் உறவுகள் வழங்கிய இன்றைய உதவி!!

கனடாவில் வசித்துவரும் மஜிதா,கவிதா ஆகியோரின் தாயாரான திருமதி நாகம்மா கணபதிப்பிள்ளை அவர்களது 14 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு , பிள்ளைகள் இருவரும் பின்தங்கிய கிராமம் ஒன்றிலுள்ள முதியவர்கள் மற்றும் சிறுவர்களுக்கு மதிய உணவினை வழங்கி வைத்துள்ளார்கள். 

தமது தாயாரின் நினைவு தினத்தில் மற்றோர்க்கு அன்னமிட்டு நினைவுகூரும் இரு பிள்ளைகளுக்கும் பயனாளர்களும் சமூக ஆர்வலர்களும் தமது நன்றிகளைத் தெரிவித்துள்ளதோடு 

தாயாரின் ஆத்மா சாந்திபெறவும் பிரார்த்தித்துள்ளார்கள்.

செய்தியாளர் – சமர்க்கனி

Related Articles

Leave a Reply

Back to top button