
குறிப்பிட்ட பணத்தொகை அடங்கிய பை ஒன்றை இரண்டு மாதங்கள் கடந்து உரிமையாளரிடம் ஒப்படைத்த தனியார் பேருந்து சாரதி மற்றும் நடத்துனரின் நெகிழ்ச்சி செயல் அனைவரையும் வியக்க வைத்துள்ளது.
இரண்டு மாதங்களுக்கு முன்னர் பயணி ஒருவர் ஹற்றன் -கொழுப்பு தனியார் பேருந்தில் நாற்பதாயிரத்திற்கு மேற்பட்ட பணத்துடன் மருந்துகள் அடங்கிய பையைத் தவறவிட்டுள்ளார்.
இதனைக் கண்டெடுத்த சாரதி அதனைப் பரிசோதித்துவிட்டு பையை பேருந்து நிலைய அதிகாரிகளிடம் கையளித்துள்ளார்.
தற்போது அதனைத் தொலைத்தவர் இனங்காணப்பட்டு குறித்த பை ஒப்படைக்கப்பட்டுள்ளது.
வாகனச்சாரதி மறறும் நடத்துநருக்கு பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.