இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

இன்றைய ( 24.09.2024 – செவ்வாய்க் கிழமை) பத்திரிகையில் முன்பக்கத்தில் இடம்பிடிக்க கூடிய முக்கிய செய்திகள் சுருக்கமாக ஒரே பார்வையில்!!

News

 1.

நாட்டைக் கட்டியெழுப்ப அனைவரையும் அழைக்கும் ஜனாதிபதி அனுர!!

நாட்டைக் கட்டியெழுப்பும் பணியில் அனைத்து மக்களினதும் ஆதரவும் தேவை எனவும் தற்போதைய இலங்கையின் நெருக்கடியைத் தீர்க்க சர்வதேச ஆதரவும் தேவை எனவும் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். 

2.

தினேஷ் குணவர்த்தன பதவி விலகல்!!

புதிய ஜனாதிபதியின் பதவியேற்பை அடுத்து பிரதமர் தினேஷ் குணவர்த்தன பதவி விலகியுள்ளார். 

3.

பாராளுமன்ற தேர்தலை ஒரு சின்னத்தில் சந்திப்போம்!!

ஜனாதிபதி தேர்தலில் கருத்து வேறுபாடுகளால் பிரிந்திருந்தாலும் இனி வரும் காலங்களில் அவற்றைத் தவிர்த்து பாராளுமன்ற தேர்தலில் ஒரு குடையின் கீழ் ஒன்றிணையவேண்டும் என பா.  அரியநேந்திரன் அழைப்பு விடுத்துள்ளார். 

4.

வடக்கு ஆளுநர் பதவி விலகல்!!

வடக்கு மாகாண ஆளுநர் பி. எஸ். எம்.  சாள்ஸ் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். 

5.

தமிழ் பொது வேட்பாளருக்கான வாக்குகள் தமிழ் தேசியத்துக்கான வாக்குகள்!!

தமிழ் மக்கள் தமிழ் பொது வேட்பாளருக்காக அளித்துள்ள வாக்குகள் தமிழ் தேசியத்துக்கான வாக்குகள் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். 

6.

சீனா விடுத்துள்ள அழைப்பு!!

புதிய ஜனாதிபதியான அனுரகுமார திசாநாயக்கவிற்கு வாழ்த்து தெரிவித்த சீனா,  புதிய பட்டுப்பாதை திட்டத்தில் வெற்றிகரமான விசயங்களை முன்னெடுகாகவும் அழைப்பு விடுத்துள்ளது. 

செய்தியாளர் – சமர்க்கனி

Related Articles

Leave a Reply

Back to top button