இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

இன்றைய (23.09.2024 – திங்கட்கிழமை) பத்திரிகையில் முன்பக்கத்தில் இடம்பிடிக்க கூடிய முக்கிய செய்திகள் சுருக்கமாக ஒரே பார்வையில்!!

News

 1

அனுர இன்று பதவியேற்பு!!

இலங்கையின் 9 அவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக இன்று (23-09-2024) காலை தேசிய மக்கள் கட்சியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க பதவியேற்கவுள்ளார்.

இதன்படி, கொழும்பில் ஜனாதிபதி செயலகத்தில் அவரது பதவியேற்பு வைபவம் மிக எளிமையான முறையில் நடைபெறவுள்ளது.

2.

அனுரவுக்கு ஆதரவளிக்கத் தயார்  – சஜித்!! 

புதிய ஜனாதிபதியான அனுரகுமார திசாநாயக்கவுக்கு ஆதரவளிக்க நாம் தயாராக உள்ளோம் என சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். 

3.

தனது சொந்த இல்லத்திற்குச் சென்றார் ரணில் விக்கிரமசிங்க!!

 ஜனாதிபதி ரணில். விக்கிரமசிங்க,  அமைதியான ஆட்சி மாற்றத்திற்கு வழிகொடுத்து தன்னுடைய அலுவலகத்தில் இருந்து நேற்று  மாலை வெளியேறினார்.

4.

2 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றார் தமிழ் பொது வேட்பாளர்!!

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர், பா.  அரியநேந்திரன், இரண்டு லட்சத்து இருபத்து ஆறாயிரத்து 343 வாக்குகளைப் பெற்றுள்ளார். 

5.

நன்றி தெரிவித்து உருக்கமான பதிவை வெளியிட்ட அனுரகுமார!!

பல நூற்றாண்டுகளாக நாம் வளர்த்து வந்த கனவு இறுதியாக இன்று நனவாகியுள்ளது. இந்த சாதனை நூறாயிரக்கணக்கானவர்களின் கூட்டு முயற்சி. உங்கள் அர்ப்பணிப்பு எங்களை இவ்வளவு தூரம் கொண்டு வந்துள்ளது, அதற்காக நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன் என தேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

செய்தியாளர் – சமர்க்கனி

Related Articles

Leave a Reply

Back to top button