இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

இன்றைய (05.10.2024 – சனிக்கிழமை) பத்திரிகையில் முன்பக்கத்தில் இடம்பிடிக்க கூடிய செய்திகள் சுருக்கமாக ஒரே பார்வையில்!!

 1.

தமிழரசுக் கட்சி தனித்துப் போட்டி!!

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் வடக்கு கிழக்கு அனைத்து இடங்களிலும் தமிழரசுக் கட்சி தனித்து போட்டியிடும் என அக்கட்சியின் அரசியல் குழு தீர்மானித்துள்ளது.

2.

ஜெய்சங்கர் தமிழ் கட்சிகளைச் சந்திக்கவில்லை!!

இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தமிழ் கட்சிகளைச் சந்திக்காமலே பயணத்தை நிறைவு செய்துள்ளார். 

3.

ஜனாதிபதிக்கு வந்த அழைப்பு!! 

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவை இந்தியாவுக்கு வருமாறு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, அழைப்பு விடுத்துள்ளார்.

4.

50 இந்திய மீனவர்கள் விடுதலை!! 

எல்லை தாண்டி மீன் பிடிக்க வந்த 50 இந்திய மீனவர்களை 10 ஆண்டுகள் ஒத்திவைத்த சிறைத்தண்டனையுடன் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. 

5.

நியமனம் ஒன்றை இரத்து செய்தார் ஜனாதிபதி அனுர!! 

பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய வழங்கிய நியமனம் ஒன்றை இரத்துச் செய்து ஜனாதிபதி அநுரகுமார உத்தரவிட்டுள்ளார்.

செய்தியாளர் – சமர்க்கனி

Related Articles

Leave a Reply

Back to top button