![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/03/IMG_20220324_103424_1.jpg?resize=708%2C398&ssl=1)
வவுனியா காசநோய் பிரிவினரால் “காச நோயை முடிவுக்கு கொண்டு வர முதலிடுவோம்”, “உயிர்களை காப்பாற்றுவோம்” எனும் தொனிப்பொருளில் மக்களிற்கு விழிப்புணர்வினை ஏற்படுத்தும் முகமாக பேரணி ஒன்று இடம்பெற்றிருந்தது.
வவுனியா மாவட்ட வைத்தியசாலை காச நோய் கட்டுப்பாட்டு பிரிவின் ஏற்பாட்டில் குறித்த விழிப்புணர்வு பேரணி இடம்பெற்றிருந்தது.
காச நோய் தொடர்பான கருத்தரங்கு ஒன்று காலை 9.30 மணிக்கு காச நோய் கட்டுப்பாட்டு பிரிவு அலுவலகத்தில் இடம்பெற்று பின்னர்
இப்பேரணியானது காச நோய் கட்டுப்பாட்டு பிரிவில் இருந்து வவுனியா மணிக்கூட்டு கோபுரம் ஊடாக பஜார் வீதியினை அடைந்து மீண்டும் வைத்தியசாலையினை அடைந்திருந்தது.
இப்பேரணியில் காச நோய் தொடர்பான பதாதைகளை ஏந்திய வண்ணம் குறித்த பிரிவிற்கான வைத்தியர்கள், தாதியர் கல்லூரி மாணவர்கள், சுகாதார பிரிவினர் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/03/IMG_20220324_095711.jpg?resize=708%2C398&ssl=1)
செய்தியாளர் – கிஷோரன்