இலங்கைசெய்திகள்

மட்டுவில் தெற்கு வளர்மதி சனசமூக நிலையத்தின் மகளிர் தின நிகழ்வு!!

Women's Day event

“நாடும் தேசமும் உலகமும் அவளே”

மட்டுவில் தெற்கு வளர்மதி சனசமூக நிலையத்தின் மாதர் அபிவிருத்தி சங்க 2022 ஆண்டுக்கான மகளிர் தின நிகழ்வு இன்றைய தினம் 12.03.2022 சனிக்கிழமை பி.ப 1.30 மணிக்கு வளர்மதி சனசமூக நிலைய மைதானத்தில் வளர்மதி மாதர் அபிவிருத்தி சங்க தலைவி திருமதி டர்சிகா அமல்ராஜ் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் முதன்மை விருந்தினராக திருமதி . விமலேஸ்வரி ஶ்ரீகாந்தரூபன் { ஓய்வுபெற்ற வடமாகாண பணிப்பாளர் , தேசிய இளைஞர் சேவைகள் மன்றம், இளைஞர் விவகார அமைச்சு} அவர்களும் சிறப்பு விருந்தினராக திருமதி. நிர்மலா ஶ்ரீதரன் {ஆசிரியர் – யா/ மட்டுவில் தெற்கு அ.மி.த.க பாடசாலை} அவர்களும் கௌரவ விருந்தினர்களாக திருமதி. யோகராணி தேவன் { சுவிஸ் வாழ் வளர்மதி அங்கத்தவர்} , திருமதி . கௌரி பிரதீபன் {கனடா வாழ் வளர்மதி அங்கத்தவர்}, திருமதி. ரஜனி குலதீபன் { சுவிஸ் வாழ் வளர்மதி அங்கத்தவர்} ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர். விளையாட்டுகள், கலை நிகழ்வுகள் என இனிய தருணமாக மகளிர்தின நிகழ்வு கொண்டாடப்பட்டது.

Related Articles

Leave a Reply

Back to top button