இலங்கைசெய்திகள்

10 மணி நேர நீர் வெட்டு அமுல்!!

Water cut

கொழும்பு மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று (10)தினம் 10 மணி நேர நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளது.

முற்பகல் 10 மணி முதல் இந்த நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

அம்பத்தலை நீர்விநியோக நிலையத்தின் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக இந்த நீர் விநியோகம் தடைப்படவுள்ளது.

இதன்படி கொழும்பு, தெஹிவளை, கல்கிஸ்ஸை, கோட்டே, கடுவளை மாநகர சபை, மஹரகம, பொரலஸ்கமுவ ஆகிய பகுதிகளுக்கு நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளது.

அத்துடன், கொலன்னாவை நகர சபை, கொட்டிகாவத்தை, முல்லேரியா, இரத்மலானை மற்றும் கட்டுபெத்த ஆகிய பகுதிகளுக்கும் நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button