இலங்கைசெய்திகள்

கடற் தொழிலில் ஈடுபடுவோருக்கு எச்சரிக்கை!!

warning

புத்தளம் முதல் கொழும்பு காலி ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்தை அண்டிய கடற்பகுதியில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக இன்று (05) முதல் கடற்கரையை அண்மித்துள்ள கடற்பகுதிகளில் தொழிலுக்கு செல்ல வேண்டாமென கடற்றொழில் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹவத்த தெரிவித்துள்ளார்.

தற்போது நாட்டைச் சூழவுள்ள கடற் பகுதியில் காணப்படும் சீரற்ற வானிலை காரணமாக காலநிலை அறிவித்தல்கள் தொடர்பாக அவதானம் செலுத்தி கடற்றொழிலில் ஈடுபடுமாறும் அனைத்து கடற்றொழிலாளர்களிடம் வேண்டுகோள் விடுப்பதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button