இலங்கைசெய்திகள்

வவுனியா வைத்தியசாலைக்குள் வாள் வெட்டுக்குழு அட்டகாசம் – பாதுகாப்பு ஊழியர்களின் தலையீட்டினால் அசம்பாவிதம் தடுக்கப்பட்டுள்ளது!!

vavuniya hospital


 வவுனியா பொது வைத்தியசாலைக்குள் இன்று மதியம் சென்ற வாள் வெட்டுக்குழுவினர் பதுங்கியிருந்து நபர் ஒருவரை இலக்குவைத்து தாக்க முற்பட்டபோது பாதுகாப்புக்கடமையிலிருந்த பாதுகாப்பு ஊழியர்கள் மற்றும் பொலிசார் இணைந்து அங்கு இடம்பெறவிருந்த வாள் வெட்டுச்சம்பவம் தடுக்கப்பட்டுள்ளதுடன் வாள் வெட்டுக்குழுவினர் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர் . 
வவுனியா பொது வைத்தியசாலைக்குள் இன்று மதியம் நோயாளர்களைப் பார்வையிடும் உறவினர்கள் என்று உள் நுழைய முற்பட்ட சிலர் அங்கு பார்வையாளர்கள் காத்திருக்கும் பகுதியில் தங்கியிருந்துள்ளனர் .
 எனினும் பாஸ் நடைமுறை காரணமாக உள் நுழைய முடியாமல் வெளியே நீண்ட நேரம் காத்திருந்துள்ளனர் . வைத்தியசாலை விடுதியிலிருந்து வெளியே வந்த நபர் ஒருவர் மீது மறைந்திருந்து குறித்த குழுவினர் . தாக்க முற்பட்டபோது பாதுகாப்பு ஊழியர்கள் விரைந்து செயற்பட்டதால் வாள் வெட்டுக்குழுவினரின் முயற்சி பிசுபிசுத்துள்ளது. வெளியே காத்திருந்த வாள் வெட்டுக்குழுவினர் வைத்தியசாலைப் பொலிசாரின் வருகையுடன் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டதாகவும் தகவல் தெரிவித்துள்ளனர் .
 வைத்தியசாலைக்கு வந்த குழுவினர் . இன்று காலை அண்ணாநகர் பகுதியில் இடம்பெற்ற அடிதடிச் சம்பவம் ஒன்றுடன் தொடர்புபட்ட நபர்களைத் தேடி வைத்தியசாலைக்குச் சென்றதாகவும் தெரியவருகின்றது . இன்று வைத்தியசாலைக்குள் இடம்பெற்ற இச்சம்பவம் குறித்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது .
செய்தியாளர் கிஷோரன்

Related Articles

Leave a Reply

Back to top button