![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/05/22-627239f5e08c8.jpeg?resize=309%2C232&ssl=1)
வவுனியாவில் காணாமல் போன தனது உறவுகளைத் தேடிய தாயார் ஒருவர் மரணமடைந்துள்ளார். தொடர்ந்து போராட்டங்களை முன்னெடுத்து வரும் காணாமல் போனோர் உறவுகளால் இன்றைய தினம் இவரது பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
தனது மகன், மருமகள். பேரப்பிள்ளை என்போரையே இவர் தேடி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.