இலங்கைசெய்திகள்

வவுனியாவில் பெண்களுக்கு பாலியல் தொல்லை – நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை!!

vavuniya

வவுனியாவில் பல்வேறு பகுதிகளில் நடைபாதையில் வியாபார நடவடிக்கை மேற்கொண்டுவரும் சிலரினால் பெண்களுக்கு பாலியல் தொல்லைகள் இடம்பெற்று வருவதாகவும் இது குறித்து முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றும் எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது .

இலுப்பையடி , வைத்தியசாலை , புகையிரத நிலைய வீதி என்பனவற்றில் மக்கள் நடமாட்டம் அதிகம் காணப்படும் பகுதிகளில் நடைபதையில் வியாபார நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன . இவ்வாறு நடைபாதை வியாபாரம் மேற்கொள்வதற்கு நகரில் நகரசபையினால் ஒதுக்கப்பட்ட பகுதி காடு படர்ந்து காட்சியளிக்கின்றது அங்கு சென்று வியாபார நடவடிக்கை மேற்கொள்வதற்கு எவ்விதமான நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை .

வைத்தியசாலை இலுப்பையடி போன்ற மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில் இடம்பெற்று வரும் நடைபாதை வியாபாரிகள் சிலரினால் பெண்களுக்கு பாலியல் தொல்லை . கொடுக்கும் நடவடிக்கைகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது . இது குறித்து நகரசபை மற்றும் வீதி அபிவிருத்தி அதிகாரசபை வீதி அபிவிருத்தித்திணைக்களம் என்பனவும் கண்டுகொள்ளவில்லை . இலுப்பையடியில் காணப்படும் ஆலயம் ஒன்றிற்கும் . மக்கள் வழிபாடுகளை மேற்கொள்ளவும் வங்கிகளுக்கும் சென்று வருகின்றனர் . இவ்வாறு செல்லும் மக்களிடம் நடைபாதை வியாபாரிகள் சிலரினால் பெண்களுக்கு பாலியல் தொல்லைகள் இடம்பெற்று வருவதாகவும் இவ்வாறான நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த உரிய நடவடிக்கை எடுக்குமாறும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது .

செய்தியாளர் கிஷோரன்

Related Articles

Leave a Reply

Back to top button