![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2021/11/vakcen-1.png?resize=708%2C409&ssl=1)
சுகாதார அலுவலகப் பிரிவில் 60 வயதுக்கு மேற் பட்டவர்களுக்கான மூன்றாவது பைசர் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை ஆரம்பம்.
மட்டக்களப்பு காத்தான்குடி சுகாதார அலுவலகப் பிரிவில் 60 வயதுக்கு மேற் பட்டவர்களுக்கான மூன்றாவது பைசர் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை செவ்வாய்கிழமை (30) ஆரம்பிக்கப்பட்டது.
![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2021/11/vakcen-2.png?resize=708%2C398&ssl=1)
காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள புதிய காத்தான்குடி 167பி, 167டி ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுககளிலுள்ள 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இந்த பைசர் தடுப்பூசி போடப்பட்டது. புதிய காத்தான்குடி நூறானிய்யா ஜும்ஆப்பள்ளிவாயலில் இத் தடுப்பூசி போடும் நடவடிக்கை இடம் பெற்றது.
![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2021/11/vakcen-3.png?resize=708%2C402&ssl=1)
காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் யு.எல்.நசிர்தீனின் மேற்பார்வையில் மேற்பார்வை சுகாதார பரிசோதகர் ஏ.எல்.எம்.பசீர் உட்பட பொதுச் சுகாதார பரிசோதகர்களின் பங்கு பற்றுதலுடன் தாதியர்களினால் இத் தடுப்பூசி போடப்பட்டது.
![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2021/11/vakcen-5.png?resize=708%2C393&ssl=1)
ஏற்கனவே இரண்டு தடவைகள் செனோபாம் தடுப்பூசிகளை ஏற்றிக் கொண்ட 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மூன்றாவது தடுப்பூசியாக பைசர் தடுப்பூசி போடப்பட்டது.
வ.சக்திவேல்