உலகம்செய்திகள்

யுக்ரேனுக்காகக் கூடியது ஜீ.7 நாடுகள்!!

Ukraine

ஜீ – 7 நாடுகள் யுக்ரைனுக்கு ஆதரவளிக்கத் தீர்மானித்துள்ளன.

ரஷ்யாவின் ஏவுகணை ஒன்று கடந்த திங்கட்கிழமை யுக்ரைனை கடுமையாகத் தாக்கி இருந்தது.குறித்த ஏவுகணைத் தாக்குதலில் குறைந்த பட்சம் 19 பேர் பலியானமை குறிப்பிடத்தக்கது.

இதனைத் தொடர்ந்து ஜீ.7 நாடுகளின் தலைவர்கள் இந்தத் தீர்மானத்தை மேற்கொண்டுள்ளனர்.

இந்த தாக்குதலை அடுத்து நேற்று இணைய வழியில் அவசர கூட்டத்தை நடத்திய ஜீ.7 நாடுகளின் தலைவர்கள், யுக்ரைனுக்கு தொடர்ந்தும் இராணுவ மற்றும் மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கு தீர்மானித்தனர்.

இதேவேளை தேவையான வரையில் யுக்ரைனுடன் இணைந்திருப்பதாக நேட்டோ அமைப்பும் அறிவித்துள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button