![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/04/viber_image_2022-04-20_11-51-57-956.jpg?resize=708%2C398&ssl=1)
அமைச்சரவை மாற்றத்தின் பின்னர் சடுதியாக உணவுப்பொருட்கள் விலை அதிகரித்தமையைக் கண்டித்து நாடெங்கிலும் மக்களால் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
திருகோணமலை – கண்டி பிரதான வீதியான அபயபுர சுற்று வளைவு சந்தியில் மூன்று பக்கமாகவும் ஆர்ப்பாட்டகாரர்களால் வீதித் தடை
போட்டு மறிக்கப்பட்டுள்ளதுடன் உப்புவெளி பகுதிக்குச் செல்லும் வீதியும் மறிக்கப்பட்டுள்ளது.
கடைகள் , மற்றும் மத்திய மீன் சந்தை மூடப்பட்டு காணப்படுகின்றது.அத்தோடு திருகோணமலை மணிக்கூட்டு கோபுரச் சந்தியில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/04/viber_image_2022-04-20_11-51-58-049-1024x576.jpg?resize=708%2C398&ssl=1)