இலங்கைசெய்திகள்

“உள்ளம்” அமைப்பினரால் பாலர் பாடசாலைக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைப்பு!!

Trincomalee

திருகோணமலை கோணேசபுரியில் அமைந்துள்ள செவ்வந்தி பாலர் பாடசாலைக்கு உள்ளம் அமைப்பினரால் மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன. கடந்த சனிக்கிழமை (12) மேற்படி பாலர் பாடசாலைக்கான கற்றல் உபகரணத் தொகுதிகள் வழங்கி வைக்கப்பட்டன. மிகவும் வறிய நிலையில் உள்ள மேற்படி பாடசாலையின் நிலையறிந்து லண்டனில் வசிக்கும் புவனசிங்கம் என்ற குடும்பத்தினர் தனது தருணிக்கா என்ற மகளின் பிறந்த தினத்தை முன்னிட்டு அதற்கான செலவினை இந்த ஏழைப்பிள்ளைகளின் கல்விக்காக செலவிட்டு ஒரு முன்மாதிரியை காட்டியுள்ளனர். அத்துடன் அன்றைய தினம் விளையாட்டுப் போட்டி, பரிசளிப்பு , பகலுணவு என அனைத்தையும் பொறுப்பேற்று ஆசிரியர்களும் மாணவர்களும் மகிழ்ச்சியாக அன்றைய தினத்தை கழித்திட உதவியுள்ளனர். எனவே ஒரு முன்மாதிரியான செயற்பாடாக பிரதேச மக்கள் இதை குறிப்பிடுகின்றனர்.

ஏ.ஜே.எம்.சாலி

திருகோணமலை

Related Articles

Leave a Reply

Back to top button