இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
பயணப் பதிவு அட்டை முறைமை ஜனவரி முதல் அமுலுக்கு வருகிறது!!
Travel log

இலங்கைக்குள் பிரவேசிக்கும் மற்றும் நாட்டிலிருந்து வெளியேறும் வெளிநாட்டவர்கள் மற்றும் இலங்கையர்கள், வருகை மற்றும் புறப்பாடு அட்டையை எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி முதல் இணையத்தளத்தில் பூர்த்திசெய்ய வசதி செய்யப்பட்டுள்ளது.
விமான நிலையத்தில் பயணிகளுக்கு ஏற்படும் அசௌகரியங்களைத் தவிர்க்கும் நோக்கில் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.immigration.gov.lk அல்லது eservices.immigration.gov.lk என்ற இணையத்தளத்திற்குச் செல்வதன் மூலம், புறப்படுவதற்கு அல்லது வருவதற்கு மூன்று நாட்களுக்கு முன்னர் உரிய அட்டையை நிரப்புவதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.