இலங்கைசெய்திகள்

அடுத்த ஜனாதிபதி சஜித் – அடித்துக் கூறுகின்றார் திஸ்ஸ!!

Tissa Attanayake MP

“அடுத்த ஜனாதிபதி சஜித் பிரேமதாஸவே. இதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.”

  • இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க எம்.பி. ஊடகங்களிடம் தெரிவித்தார். மைத்திரிபால சிறிசேன அல்லது ரணில் விக்கிரமசிங்க எதிர்க்கட்சித் தலைவராகுவதற்கான சாத்தியம் உள்ளது எனக் கூறப்படுகின்றதே என்ற கேள்விக்கு

“சஜித் பிரேமதாஸவே எமது எதிர்க்கட்சித் தலைவர். நாம்தான் தற்போதைய நாடாளுமன்றத்தில் இரண்டாவது பெரிய கட்சி. எனவேஇ எதிர்க்கட்சித் தலைவர் பதவியைச் சவாலுக்குட்படுத்த முடியாது. அடுத்த ஜனாதிபதியும் அவர்தான். இதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை” – என்று பதிலளித்தார் திஸ்ஸ அத்தநாயக்க.

செய்தியாளர் – சுடர்

Related Articles

Leave a Reply

Back to top button