இலங்கைசெய்திகள்

முன்னாள் ஜனாதிபதி தலைமையில் தைப்பொங்கல் நிகழ்வுகள்!!

Thaipongal events

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தைப் பொங்கல் விழா முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருமான கௌரவ மைத்திரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இன்று (ஜன.12) காலை இடம்பெற்றது.

பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த தைப் பொங்கல் விழாவில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உபதலைவர் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, பொதுச்செயலாளரும் இராஜாங்க அமைச்சருமான தயாசிறி ஜயசேகர, அமைச்சர் மகிந்த அமரவீர, இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண, பாராளுமன்ற உறுப்பினரும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் யாழ் மாவட்ட தலைவருமான அங்கஜன் இராமநாதன், பாராளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டார, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர்கள், உறுப்பினர்கள் எனப்பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

செய்தியாளர் கிஷோரன்.

Related Articles

Leave a Reply

Back to top button