![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/12/image-1.png?resize=708%2C404&ssl=1)
ஒரே கட்டமைப்பில் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களின் தரவுகளை உள்ளீடு செய்யும் வேலைத்திட்டம் அடுத்த வருடம் ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
நேற்று இடம்பெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொண்டபோதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
இதனூடாக ஆசிரியர், அதிபர்களின் இடமாற்றங்கள், பதவி உயர்வுகள் போன்றவை தொழில்நுட்ப முறையின் அடிப்படையில் மேற்கொள்ள எதிர்பார்ப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.