இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
திருத்தப்பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு விசேட கொடுப்பனவு!!
Teachers
![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2023/02/23-63e099cd386ae.jpeg?resize=600%2C400&ssl=1)
உயர்தரப் பரீட்சை மதிப்பீட்டுப் பணியில் ஈடுபடவுள்ள ஆசிரியர்களுக்கு நாளாந்த கொடுப்பனவு 3000 ரூபா வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொடுப்பனவு வழங்குதல் குறித்த அமைச்சரவை பத்திரம் இன்று அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட வுள்ளதாகவும் கல்வி அமைச்சர் சுசில் பிதேமஜயந்த இந்த யோசனையை சமர்ப்பிக்கவுள்ளார் எனவும் கூறப்படுகிறது.
போக்குவரத்துச் செலவுகள் காரணமாக இம்முறை பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டிற்கு ஆசிரியர்கள் நாட்டம் காட்டுவது குறைந்துள்ளதன் காரணமாகவே நாளாந்த கொடுப்பனவை அதிகரிக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
இம்முறை பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டிற்காக விண்ணப்பம் செய்த ஆசிரியர்களின் எண்ணிக்கையானது மொத்த எண்ணிக்கையில் மூன்றில் ஓர் பங்கினர் மட்டுமே எனத் தெரிவிக்கப்படுகின்றது.