செய்திகள்புலச்செய்திகள்

பரிசு பெறுவதற்காக தமிழ் மாணவர்கள் இங்கிலாந்து பயணம்!!

Tamil students

பரிசு பெறுவதற்காக மூன்று தமிழ் மாணவர்கள் இங்கிலாந்து பயணமாகியுள்ளனர்.

நாடளாவிய ரீதியில் நடாத்தப்பட்ட சிதம்பரா கணிதப்போட்டியில் வெற்றிபெற்ற மூன்று மாணவர்களே இந்தப் பயணத்தை மேற்கொண்டுள்ளனர்.

திருகோணமலை இ.கி.ச ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக்கல்லூரியைச் சேர்ந்த இரு மாணவர்களான செல்வன் யசோதரன் மிதுலாஷன், செல்வன் உதயாரன்  கோஷிகன் மற்றும் கிளிநொச்சி  மத்திய மகா வித்தியாலய மணவனான செல்வன் சுகந்தன் சாகித்தியன் ஆகியோரே பரிசு பெறவுள்ள மாணவர்களாவர்.

இவர்கள்  நாளை சனிக்கிழமை (25/6/2022) இங்கிலாந்தில் நடைபெறவுள்ள சிதம்பரா கணிதப்போட்டி பரிசளிப்பு விழாவில் பங்குபற்றுவதற்காக விமானம் மூலம் இங்கிலாந்து சென்றுள்ளனர்.

Related Articles

Leave a Reply

Back to top button