கவிதைமுத்தமிழ் அரங்கம்.

என்னுயிர் தமிழே – கவிஞர் வியன்சீர்!!

tamil

ஏற்றம்கண்ட மெய்மொழியே
நெஞ்சம் எங்கும் நீயே…
நீயே மாற்றமில்லையிங்கு
வாழவைப்பாய் தாயே…
தாயே உன்னை
நான் இணைத்தேன்
என் கவியில் தானே…
தானே சேயே
தூங்கவைப்பாய்
உன் மடியும் வானே…
வானே எல்லை
இல்லையிங்கு
நான் உணர்ந்தேன்
முன்னே…
முன்னே உன்னை
நேசித்திடா வாழ்வும்
மாறும் தீதே…
தீதே இல்லா தஞ்சம் ஏற்கும்
மொழியும் உள்ளம் மீதே…
மீதே உன்னை
நான் நினைத்தேன்
உறவிலேற்ற மாதே…
மாதே எந்தன் உள்ளம்
தன்னில் உன்னால்
கண்டேன் தேற்றம்…

தேற்றம் தன்னில்
வாழ்வும் கண்டேன்
இன்னுமின்னும் ஏற்றம்…..

Related Articles

Leave a Reply

Back to top button