இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

பகிடிவதையால் 11 மாணவர்கள் இடைநிறுத்தம்!!

Tacking

 பழுதடைந்த சோற்றைக் கொடுத்து புதிய மாணவர்களைப் பகிடிவதைக்கு உள்ளாக்கிய சம்பவம் தொடர்பில் பேராதனைப் பல்கலைக்கழக முகாமைத்துவ பீடத்தின் இரண்டாம் வருட மாணவர்கள் 11 பேர், வகுப்பிலிருந்து  இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.

   கடந்த 5ஆம் திகதி புதிய மாணவர்களை விடுதிக்கு அழைத்துச் சென்று பழுதடைந்த சோற்றை உண்ணச் செய்து அவர்களைக் கடுமையான வார்த்தைகளால் திட்டியதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பகிடிவதைக்கு உள்ளாக்கிய மாணவர்களுக்கான வகுப்புத்தடை நேற்று முன்தினம் (10) முதல் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், முறையான விசாரணை நடத்தப்பட்டு அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் உப வேந்தர் டெரன்ஸ் மதுஜித் கூறியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

Related Articles

Leave a Reply

Back to top button