இலங்கைசெய்திகள்

பட்டப்பகலில் யாழில் வாள்வெட்டு!!

Sword

இன்று (15) முற்பகல் யாழ்ப்பாணம் – பரமேஸ்வரா சந்திப் பகுதியில்இ வாள்வெட்டுச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இந்த வாள்வெட்டுச் சம்பவத்தில் இளைஞன் ஒருவர் காயமடைந்துள்ளார்.

குறித்த இளைஞன் உந்துருளியில் பயணித்துக்கொண்டிருந்தபோது இரண்டு உந்துருளிகளில் அவரை பின்தொடர்ந்த நால்வர் பரமேஸ்வரா சந்தியில் வைத்து குறித்த இளைஞனை வழிமறித்து வாள்வெட்டு தாக்குதலை நடத்தியுள்ளனர்.

இதன்போது குறித்த குழுவினரிடமிருந்து தப்பித்து யாழ்ப்பாண பல்கலைக்கழகம் பக்கமாக குறித்த இளைஞன் ஓடிச் சென்றுள்ளார்.

எனினும் அவரை மீண்டும் துரத்திச்சென்ற குறித்த குழுவினர் வாள்வெட்டு தாக்குதல் நடத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும்

சம்பவத்தில் படுகாயமடைந்த இளைஞன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.

இந்த சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் மற்றும் கோப்பாய் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Related Articles

Leave a Reply

Back to top button