செய்திகள்புலச்செய்திகள்

இசைப் போட்டியில் மகுடம் சூடிய சிறுமி!!

Swiss

05.06.2022 அன்று 7வது முறையாக நடைபெற்ற சுவிஸ் நாடு தழுவிய தமிழீழ எழுச்சிப் பாடல் போட்டியில் சிறுமி ஒருவர் மகுடம் சூடியுள்ளார்.

“எழுச்சிக்குயில் 2022” விருதிற்கான போட்டியில் கனிஷா பாலகுமரன் என்பவரே முதலிடத்தைப் பெற்று “எழுச்சிக் குயில்”எனும் மகுடத்தினைச் சூடிக்கொண்டார்.

மிக வேகமாக வளர்ந்து வரும் இளம் பாடகி கனிஷா பாலகுமரன் அவர்கள் பல இறுவெட்டுக்களில் தமிழீழ எழுச்சிப் பாடல்கள் உட்பட இறைவனிற்கான பல பாமாலைகளையும் பாடி வருபவர்.

இவர் இவ்வருடம் மாசி மாதம் சூரிச் மாநிலத்தில் இடம் பெற்ற பாடல் போட்டியில் கீழ்ப் பிரிவில் “இளம் கானக்குயில்”பட்டத்தினையும் தனதாக்கிக் கொண்டவராவார்.

இவர் வலே மாநிலத்தில் வசிக்கும் பாலகுமரன் மதி ஆகியோரின் புதல்வியுமாவார். இவரிற்கு நாடெங்கும் பரந்து வாழும் தமிழ் சொந்தங்கள் அனைவரும் தமது  வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

தகவல் – ஆரபி

Related Articles

Leave a Reply

Back to top button