இலங்கைசெய்திகள்

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தொழிற்சங்க நடவடிக்கைக்கு தயாராகிறது!!

strike

எதிர்வரும் திங்கட்கிழமை (21) தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இன்று இடம்பெற்ற மத்தியக்குழு கூட்டத்தில் இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.

தேசிய சம்பளக் கொள்கையை அரசாங்கம் மீறியமை உள்ளிட்ட விடயங்களுக்கு எதிராக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தொழிற்சங்க நடவடிக்கையொன்றை மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாக அதன் மத்தியக்குழு மற்றும் ஊடகக்குழு உறுப்பினர் வைத்தியர் வாசன் ரட்ணசிங்கம் பிரசாத் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், மத்திய குழு மேற்கொண்டுள்ள அடையாள வேலை நிறுத்தப் போராட்டம் தொடர்பான தீர்மானம் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் நிறைவேற்று குழுவுக்கு அனுப்பி இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button