இலங்கை

சுதந்திரக் கட்சி இதுவரை 48 கட்சிகளுடன் பேச்சு!!

srilanka freedom party

பலம் பொருந்திய அமைப்பொன்றை உருவாக்கும் நோக்கில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி இதுவரை 48 கட்சிகளுடன் கலந்துரையாடியுள்ளது என தென்னிலங்கை ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

எதிர்வரும் தேர்தல்களில் போட்டியிடுவதற்காகப் பலம் பொருந்திய அரசியல் அமைப்பை உருவாக்கும் நோக்கில், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியானது ஏனைய கட்சிகளுடன் கலந்துரையாடி வருகின்றது.

இந்நிலையில், இதுவரை 48 கட்சிகளுடன் கலந்துரையாடியுள்ளது எனக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் இணைந்தே கலந்துரையாடல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கமைவாக எதிர்வரும் தேர்தல்களில் மிகவும் பலம் பொருந்திய அமைப்பாகச் செயற்படுகளை முன்னெடுக்கப்படும் முடியும் என்று கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர்.

செய்தியாளர் – சுடர்

Related Articles

Leave a Reply

Back to top button