இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

போதை மாத்திரைகளுடன் நெதர்லாந்திலிருந்து வந்த பொதி!!

Srilanka

நெதர்லாந்திலிருந்து வந்த பொதியொன்றிலிருந்து பெருந்தொகையான போதை மாத்திரைகள் மீட்கப்பட்டுள்ளன.

அப்பொதியை யாரும் உரிமை கோராத காரணத்தினால் தபால் திணைக்கள ஊழியர்கள் இலங்கை சுங்க போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் காவல்துறை போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்தினர் முன்னிலையில் சோதனையிடப்பட்ட போதே குறித்த போதை மாத்திரைகள் மீட்கப்பட்டுள்ளன.

இதன் பெறுமதி 13 கோடியே 64 இலட்சம் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது. மேலதிக விசாரணையை காவல்துறை போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்தினர் மேற்கொள்ளவுள்ளனர் என கூறப்படுகிறது.

Related Articles

Leave a Reply

Back to top button