![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/05/1b5688e1-417f40a9-kazakhstan_850x460_acf_cropped.jpg?resize=708%2C383&ssl=1)
நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையில் இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் ஜனாதிபதியினால் அவசரகால நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ஊடகப் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.
அவசரச் காலச்சட்டம்,என்பது பிடியாணையின்றி மக்களைக் காவலில் வைப்பதற்கும், சொத்துகளைக் கைப்பற்றுவதற்கும், எந்தவொரு வளாகத்திலும் நுழைந்து சோதனை செய்வதற்கும், சட்டங்களை இடைநிறுத்துவதற்கும், நீதிமன்றத்தினால் கேள்வி கேட்க முடியாத உத்தரவுகளைப் பிறப்பிப்பதற்கும் பொலிஸ், மற்றும் முப்படைகளுக்கும் அதிகாரம் வழங்குகிறது.