இலங்கைசெய்திகள்

பெற்றோல், டீசலின் தேவை குறைந்துள்ளது!!

Srilanka

பாரியளவிலான விலையேற்றம் காரணமாக பெற்றோல் மற்றும் டீசலின் தேவை சுமார் 30 வீதத்தால் குறைந்துள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் இடைநிறுத்தப்பட்டதன் காரணமாக நாட்டில் மண்ணெண்ணெய்க்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் தற்போது ஜெட் எரிபொருள் (DSW) மண்ணெண்ணெயாக விற்பனை செய்யப்படுவதாகவும்

தற்போது 37,500 மெட்ரிக் தொன் 92 ஒக்டேன் மற்றும் 95 ஒக்டேன் பெற்றோல் இறக்கப்பட்டு வருவதாகவும் கொழும்பு துறைமுகத்தில் 37,500 மெட்ரிக் தொன் டீசல் மற்றும் சுப்பர் டீசல் கொண்ட இரண்டு கப்பல்கள் டொலர்களை செலுத்தாத காரணத்தினால் 11 நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.  

Related Articles

Leave a Reply

Back to top button