இலங்கைசெய்திகள்

ஜனாதிபதி கோட்டாபய தலைமையில் அவசர கூட்டம்!!

Srilanka

அலரி மாளிகையில் அவசரகூட்டம் ஒன்று இடம்பெறுகின்றது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில்  ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுடனான இந்தக் கூட்டத்தை ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி புறக்கணித்துள்ளதாக  தகவல்கள் வெளியாகியுள்ளன.  

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் இல்லம் அமைந்துள்ள மிரிஹான பகுதியில் நேற்றிரவு ஏற்பட்ட சம்பவம் மற்றும் அரசாங்கத்தின் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சந்திப்பில் பிரதமர் மகிந்த ராஜபக்ஷவும் கலந்து கொண்டுள்ளார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Related Articles

Leave a Reply

Back to top button