இலங்கைசெய்திகள்

எரிபொருள் விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டது – சிரமத்தில் மின்சார சபை!!

Srilanka

இலங்கை மின்சார சபைக்கு வழங்கப்படும் எரிபொருள் விநியோகம் சில மணிநேரங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

இதனால் இலங்கை மின்சார சபை பாரிய சிரமங்களை எதிர்நோக்கியுள்ளதாக இலங்கை மின்சார சபையின் பேச்சாளர் அன்ட்ரூ நவமுனி தெரிவித்துள்ளார்.

ஒருவரத்திற்கான எரிபொருளை எரிசக்தி அமைச்சு முன்னர் வழங்கிவந்த நிலையில் தற்போது நாளாந்த அடிப்படையிலேயே கிடைப்பதாக அவர் கூறினார்.

இவ்வாறான நிலையில் எரிபொருள் விநியோகம் தற்போது சில மணிநேரங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

இதன் காரணமாக பல மின் உற்பத்தி நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை சுட்டிக்காட்டியுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button