![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2023/04/436e88edb3f1029166ee39449c9cc98c1664866667484501_original-1024x768.jpg?resize=708%2C531&ssl=1)
நேரடி வர்த்தகத்தில் ஈடுபடும் நபர்கள் மற்றும் நிறுவனங்கள் நுகர்வோர் விவகார அதிகார சபையில் பதிவு செய்ய வேண்டும் என வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் சாந்த நிரியெல்லவின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்ட இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
சூரிய ஒளி அமைப்புகள், தொலைபேசிகள் மற்றும் பாகங்கள், தளபாடங்கள்,காலணிகள், எழுதுபொருட்கள்,தைத்த ஆடைகள் போன்றவற்றை விற்பனை செய்யும் நேரடி விற்பனையாளர்கள் பதிவு செய்யப்பட வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது..