Breaking Newsஇலங்கைசெய்திகள்

பொது நிர்வாக அமைச்சு விடுத்துள்ள முக்கிய சுற்றறிக்கை!!

srilanka

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு சுமார் 3000 அரச ஊழியர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ள நிலையில் சம்பளமற்ற விடுமுறையில் உள்ளூராட்சி மன்றத்தேர்தலில் போட்டியிடும் அரச ஊழியர்கள் தேர்தல் தாமதம் காரணமாக மூன்று மாதங்களுக்குப் பணிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகப் பொது நிர்வாக அமைச்சு விடுத்துள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் ஒத்திவைக்கப்பட்டால்இ வேட்புமனு தாக்கல் செய்த நாளிலிருந்து மூன்று மாதங்கள் ஊதியம் இல்லாத விடுமுறையில் இருக்க வேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதற்கமைய வேட்புமனு தாக்கல் செய்த மூன்று மாதங்களுக்குப் பிறகு அரச ஊழியர்கள் தாங்கள் பணிபுரிந்த இடத்திற்குத் திரும்பலாம் என்றும் சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button