இலங்கைசெய்திகள்

மத்திய வங்கியின் ஆளுநர் மற்றும் நிதி அமைச்சின் செயலாளருக்கு அமைச்சரவைக் கூட்டத்துக்கு அழைப்பு!!

Srilanka

அமைச்சரவைக் கூட்டத்துக்கு மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் மற்றும் நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல ஆகியோர் அழைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை எதிர்நோக்கியுள்ள வெளிநாட்டு ஒதுக்கம் தொடர்பான பிரச்சினை குறித்து கலந்துரையாடுவதற்காக அவர்களை அழைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

குறித்த பிரச்சினை தொடர்பில், ஒன்றிணைந்த கலந்துரையாடலை நடத்துவதற்காக, மத்திய வங்கி ஆளுநரையும் நிதி அமைச்சின் செயலாளரையும் அமைச்சரவைக் கூட்டத்திற்கு அழைக்க முன்னதாக இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தீரமானிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Back to top button