![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/07/FB_IMG_1657857978825.jpg?resize=708%2C531&ssl=1)
இன்றுடன் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ பதவி விலகுவதாகவும் விரைவில் பாராளுமன்றத்தில் புதிய ஜனாதிபதி தெரிவு செய்யப்படுவார் எனவும் சபாநாயகர் தெரிவித்துள்ளார்.
தற்போது சபாநாயகரின் இல்லத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இடைப்பட்ட காலத்தில் பிரதமர் பதில் ஜனாதிபதியாகக் கடமை புரிவார் எனவும் இனிவரும் நாட்களில் தனது கடமை மிக முக்கியமானது எனவும் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் மக்களும் பூரண ஒத்துழைப்பு வழங்குமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/07/FB_IMG_1657857975008.jpg?resize=708%2C530&ssl=1)
![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/07/FB_IMG_1657857970780.jpg?resize=708%2C531&ssl=1)