இலங்கைசெய்திகள்

மகாசங்கத்தினர் அரசாங்கத்திற்கு விடுத்துள்ள எச்சரிக்கை!!

Srilanka

இன்று மாலை 4 மணிக்கு சர்வக்கட்சி அரசை ஸ்தாபிப்பதற்கு ஏற்றவகையில்  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என வலியுறுத்தும் ‘செங்கடகல’ பிரகடனம் வெளியிடப்படும் என கலாநிதி ஓமல்பே சோபித தேரர் தெரிவித்தார்.

சர்வக்கட்சி அரசொன்றை ஸ்தாபிப்பதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கட்சிகளிடமும் அந்தப் பிரகடனம் ஊடாக கோரிக்கை விடுக்கப்படும் எனத் தெரிவித்த  கலாநிதி ஓமல்பே சோபித தேரர்,

மகாநாயக்க தேரர்கள், மகா சங்கத்தினர் மற்றும் சர்வ மத தலைவர்களின் ஆசியுடன் கண்டியில் ( வீர கெப்பட்டிபொல சிலைக்கு முன்பாக) குறித்த பிரகடனம் வெளியிடப்படும் எனவும் கூறியுள்ளார். 

Related Articles

Leave a Reply

Back to top button