இலங்கைசெய்திகள்

மட்டுவில் தெற்கு வளர்மதி சனசமூக நிலைய பாலர் முன்பள்ளியின் விளையாட்டு விழா!!

Sports

08.03.2023 புதன்கிழமை பி.ப 2.30 மணிக்கு வளர்மதி சனசமூக நிலைய தலைவர் திரு.சி.தனுசன் அவர்களின் தலைமையில் வளர்மதி பாலர் முன்பள்ளியின் விளையாட்டு விழா இடம்பெறவுள்ளது.

இந்நிகழ்வில் யா/ கைதடி நுணாவில் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை உப அதிபர்  திருமதி. நா. சிவமலர் தலைமை விருந்தினராகவும் மட்டுவில் பொதுச்சுகாதார பரிசோதகர் திரு. க. கிருஷ்ணரட்சகன் சிறப்பு விருந்தினராகவும் வளர்மதி பாலர் முன்பள்ளி நலன்விரும்பி திருமதி. லி.அனோஜா  கௌரவ விருந்தினராகவும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

இறைவணக்கம்,  வரவேற்புரை, தலைமையுரை, விளையாட்டு நிகழ்வுகள்,  விநோத உடை, பரிசளிப்பு,  நன்றியுரை என விழா நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.

பெற்றோர்கள்,  சமூக ஆர்வலர்கள் அனைவரையும் நிகழ்வில் கலந்து சிறப்பிக்குமாறு விழா ஏற்பாட்டாளர்கள் மற்றும் விளையாட்டுப் பொறுப்பாசிரியர்களான திருமதி. க. சுபாஜினி மற்றும் திருமதி. த. அனோஜா ஆகியோரும் அன்புடன் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.




Related Articles

Leave a Reply

Back to top button