உலகம்செய்திகள்

ஸ்பெயினில் முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீப்பரவல் – ஐவர் பலி!!

Spain

ஸ்பெயினின் கிழக்கு பகுதியிலுள் முதியோர் இல்லம் ஒன்றில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீப்பரவல் காரணமாக ஐவர் பலியானதோடு 25 பேர் காயமடைந்துள்ளனர்.

எவ்வாறாயினும் தற்போது தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக அந்த நாட்டு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

தீப்பரவலை கட்டுப்படுத்துவதற்காக 5 தீயணைப்பு வாகனங்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தன.

தீப்பரவல் ஏற்பட்ட கட்டத் தொகுதியிலிருந்து புகையை சுவாசித்த 11 பேர் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த தீப்பரவல் ஏற்பட்டமைக்கான காரணம் வெளியான நிலையில் சம்பவம் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக ஸ்பெயின் தீயணைப்பு பிரிவினர் அறிவித்துள்ளனர்.

Related Articles

Leave a Reply

Back to top button